பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
சேலம்: கந்த சஷ்டி விழாவில், முருகன் கோவில்களில் நடந்த திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, கடந்த, 1ல் காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று (நவம்., 3ல்) காலை, முருகன், மரமாக நின்ற சூரனை, இரண்டாக பிளந்து, சேவல், மயிலாக மாற்றி, ஆட்கொண்ட சினம் தணிந்து, மயில் வாகனத் தில் எழுந்தருளச்செய்தனர். மாலை, வள்ளி, தெய்வானையுடன், முருகனுக்கு திருக்கல் யாணம் நடந்து, மணக்கோலத்தல் சப்பரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.
பின், ஊஞ்சல் பாலி உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. அதேபோல், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று (நவம்., 3ல்) காலை, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலை, வள்ளி, தெய்வானை யுடன், சுப்ரமணியர் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் ஆசிரமம், பெரமனூர் கந்தசாமி ஆறுமுகனார், பேர்லேண்ட்ஸ் முருகன், குமரகிரி தண்டாயு தபாணி, அம்மாபேட்டை சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச் சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களில், திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக நடந்தது.
சூரசம்ஹாரம்: தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் ஆலயத்தில், நேற்று முன்தினம் (நவம்., 2ல்) இரவு, சிலர், தேவர், அசுரர் வேடமணிந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பூமித்தாயை கடலில் மூழ்கடித்தல், மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, பூமித் தாயை மீட்டல், சூரவதம் பிறப்பு உள்ளிட்டவை காட்சிகளாக அரங்கேற்றப்பட்டன.
இதையடுத்து, சூரனை அழிக்க வேல் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து, முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.