பதிவு செய்த நாள்
05
நவ
2019
02:11
சென்னிமலை: சென்னிமலை கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவத்துடன், கோலாகலமாக நேற்று (நவம்., 4ல்)நிறைவடைந்தது. விழா வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த மாதம், 28ல் தொடங்கியது. ஆறு நாட்கள் நடந்த விழாவில், 700க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் (நவம்., 3ல்), சென்னிமலை மலை அடிவாரத்தில், நான்கு ராஜவீதிகளில், சூரசம்ஹாரம் நிகழ்வு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று (நவம்., 3ல்) காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண வைபோகம், கிழக்கு ராஜவீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில் நடந்தது. முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை உற்சவர் சுவாமிகளுக்கு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தலை மை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவம், தெய்வானைக்கு மங்கள நாண் அணிவித்து, திருக்கல் யாண உற்சவத்தை நடத்தினார். அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டவர்கள் மொய் எழுதினர். சஷ்டி விரதம் இருந்த பக்தர் களின் காப்பை, கோவில் அர்ச்சகர் கழற்றி விரத்தத்தை முடித்து வைத்தார். விழாவில் ஆயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர் .
புன்செய்புளியம்பட்டியில்..: புன்செய்புளியம்பட்டி, சுப்ரமணியர் கோவிலில், சஷ்டி திருக்கல் யாண விழாவையொட்டி, நேற்று (நவம்., 4ல்) காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைம் நடந்தது. தொடர்ந்து, உட்பிரகார மண்டபத்தில், உற்சவர் சுப்ரமணியர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருள, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மணக்கோலத்தில், சுப்ரமணியர், வள்ளி-தெய்வானை சமேதராய், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பச்சமலையில்...: கோபி, பச்சமலை முருகன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா, விசேஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்றார்.