பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு உற்சவர் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்றுமுன்தினம் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி,பூமிதேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.