Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு வலுக்கிறது கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனிதமாகிறது சரவணப்பொய்கை: தினமலர் செய்தி எதிரொலி
எழுத்தின் அளவு:
புனிதமாகிறது சரவணப்பொய்கை: தினமலர் செய்தி எதிரொலி

பதிவு செய்த நாள்

08 நவ
2019
11:11

திருப்பரங்குன்றம்,:தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை புனிதம் காக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மழை பெய்தால் மட்டுமே பொய்கை நிரம்பும். பொய்கையிலிருந்து தண்ணீர் வெளியேற வழியில்லை. இங்கிருந்து தினமும் வெள்ளி குடத்தில் தீர்த்தம் (திருமஞ்சனம்) எடுத்து யானை மீது கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கொடிகம்பத்தின் அடிப்பகுதி, பலி பீடத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது.

திருவிழா காலங்களில் சுவாமியின் தங்க கிரீடத்திற்கு சரவணப் பொய்கை தண்ணீர்மூலம் அபிஷேகம் செய்யப்படுகிறது. கொடியேற்ற திருவிழாக்களின் கடைசி நாளில் அஸ்தர தேவருக்குசரவணப் பொய்கையில் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. புனிதம் வாய்ந்த சரவணப் பொய்கையில் அப்பகுதியினர் அசுத்தம் செய்வதால் சுகாதாரக்கேடு அடைந்து, துர்நாற்றம் வீசுகிறது. சரவணப்பொய்கை தண்ணீரை புனித தீர்த்தமாக பாதுகாக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக பொய்கை தண்ணீரை இயந்திரம் மூலம் துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. முடி காணிக்கை பின்புறமுள்ள இடத்தில் கழிப்பிடம், துணி துவைக்க, குளிக்க புதிய கட்டடம் கட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி., ரூ. 44 லட்சம் ஒதுக்கீடு செய்தார். விரைவில் அப்பணிகள் துவங்க உள்ளது. இதன்மூலம் சரவணப்பொய்கை புனிதம் பாதுகாக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar