பதிவு செய்த நாள்
08
நவ
2019
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தரிசன டிக்கெட்டில் மோசடி செய்த, இரு ஊழியர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள், 50 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்று, விரைவாக தரிசனம் செய்கின்றனர்.
கோவில் யானையை பராமரித்து வந்த ஊழியர் சிங்காரம், இரவு காவலாளி பிரேம்குமார் ஆகியோர், சில நாட்களாக, கவுன்டரில் டிக்கெட் வழங்கி வந்தனர். இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக, புகார்கள் சென்றன. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆய்வு செய்தார். இதில், பக்தர்களிடம், 50 ரூபாய் பெற்று, டிக்கெட் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மோசடியில் ஈடுபட்ட சிங்காரம், பிரேம் குமார் ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, இணை ஆணையர் ஞானசேகரன் நேற்று உத்தரவிட்டார்.