Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.1 ... மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோவில்களில் சனிப் பிரதோஷம்
எழுத்தின் அளவு:
சிவன் கோவில்களில் சனிப் பிரதோஷம்

பதிவு செய்த நாள்

09 நவ
2019
01:11

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

செஞ்சி தாலுகா செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபூஜை, சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். நந்நீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் அருணாச்சலேஸ்வரர் அபித குஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், 6 மணிக்கு மகாதீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் திருப்பணி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சந்தைமேடு காசி விசுவநாதர் கோவிலில் காசி விஸ்வநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடந்தத. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்குணம் முக்குன்றநாதர் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெகனூர் பொன்னிபுரீஸ்வர் கோவிலில் பொன்னிபுரீஸ்வரர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல்,  சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar