பதிவு செய்த நாள்
09
நவ
2019
01:11
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
செஞ்சி தாலுகா செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபூஜை, சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு சாமி கோவில் உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். நந்நீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் அருணாச்சலேஸ்வரர் அபித குஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், 6 மணிக்கு மகாதீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். இதில் திருப்பணி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சந்தைமேடு காசி விசுவநாதர் கோவிலில் காசி விஸ்வநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனை நடந்தத. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்குணம் முக்குன்றநாதர் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெகனூர் பொன்னிபுரீஸ்வர் கோவிலில் பொன்னிபுரீஸ்வரர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், சனி பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.