செஞ்சி:செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவில் ஸ்ரீராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத ஸ்ரீராம பஜனை நடந்தது.
ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதி ராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் ராம பஜனையை துவக்கி வைத்தார். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் பஜனை நடந்தது.இதில் பாகவதர்கள் சாமிக்கண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு பிள்ளை, ராமு, ராஜி, ராமசாமி, சுதர்சனம், ஞான சேகர், கிருஷ்ணவேணி, உபயதாரர் சிவானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஜானகிராமன் நன்றி கூறினார்.