பதிவு செய்த நாள்
11
நவ
2019
03:11
சென்னை: ஒட்டியம்பாக்கம், ஒட்டீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.சென்னை, ஒட்டியம்பாக்கம் பகுதியில், மங்களாம்பிகை உடனாகிய ஒட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு, முதல் கும்பாபிஷேகம், 1984ல் நடைபெற்றது.
இந்த ஆண்டு, புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், 8ம் தேதி துவங்கியது. அன்றைய தினம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், யாத்ர ஹோமம், யாத்ர தானம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது.நேற்றுமுன் தினம் 8ம் தேதி, இரண்டாம் மற்றும் மூன்றாம்கால யாக பூஜை, விசேஷ சாந்தி, பூர்ணாஹூதி நடந்தது.
கடைசி நாளான நேற்று 9ம் தேதி காலை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, மங்களாம்பிகை சமேத ஒட்டீஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகள் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சிவ ஸ்ரீ ஹா.கீர்த்திவாசன் சிவாச்சார்யர், வெங்கட்ராஜன் சிவாச்சார்யர், ஹலாஸ்யநாதன் சிவாச் சார்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை, ஒட்டீஸ்வரர் பேரவை மற்றும் கிராம மக்கள் இணைந்து நடத்தினர்.