பதிவு செய்த நாள்
12
நவ
2019
11:11
நாமக்கல்: நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல், எர்ணாபுரம் அடுத்த திண்டமங்கலத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனமர் தேனீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 9:00 மணிக்கு பிரதோஷ நாயனார் மூர்த்திகள் உற்சவர் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு அன்னாபி ஷேகம் செய்யப்பட்டது.
* ராசிபுரம், தர்மசம்வர்த்தினி அம்மை உடனமர் கைலாச நாதர் கோவிலில், நேற்று மாலை, சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு அன்னாபிஷேக அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.
* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அன்னாபிஷேக, காய்கறி அலங்காரங்கள் செய்து, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஈரோடு கலெக்டர் கதிரவன் சுவாமி தரிசனம் செய்தார். அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர், கோட்டைமேடு கைலாசநாதர், கள்ளிப்பாளையம் சிவன், சவுண்டம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.