சென்னை: சென்னை, தாம்பரம் கந்தாஸ்ரமத்தில் பிரமாண்டமான சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பிற அபிஷேகங்களும் நடந்தது. இரவு 7 மணிக்கு மேல் அன்னபிஷேக பிரசாத விநியோகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.