திண்டிவனத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2019 12:11
திண்டிவனம்:ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, திண்டி வனம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று (நவம்., 12ல்) மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அன்னாபிஷேகமும், 18 சித்தர்கள் பூஜையும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மகி ளா விபாக் நிர்வாகிகள் உமா, சுமதி, பானு, வித்யா, தீபிகா, சர்வா மற்றும் அனைத்து மகிளா விபாக் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
* செஞ்சி: செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், பெரியகரம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் சிவவாத்தியங்கள் முழங்க சீர்வரிசை கொண்டு வந்தனர். மாலை 6:00 மணிக்கு காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது.
* சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர் ந்து அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
* சின்னசேலம்: தென்பொன்பரப்பியில் சொர்ணாம்பிகை உடனான சொர்ணபுரீஸ்வரருக்கு நேற்று (நவம்., 12ல்) அன்னாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற் றனர். பூஜைக்கு பின்னர் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.