சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (11 ம் தேதி) திங்கள்கிழமை மாலை 4:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜே ஸ்வரி, முருகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் கோவிலின் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து சுவாமியை வழிபட்டனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமாளுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. 8:30 மணிக்கு ராஜராஜே ஸ்வரி அம்மன் ஆலய உலாவாக வந்து ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு ஊஞ்சலில் மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.