பதிவு செய்த நாள்
13
நவ
2019
03:11
சேலம்: சபரிமலை சீசன் தொடங்கும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து, முதல்கட்டமாக, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
நவ., 17ல் கார்த்திகை மாத முதல் நாளில், சபரிமலை சீசன் தொடங்குகிறது. அதை முன்னி ட்டு, வரும், 15 முதல், விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, புதுச்சேரி, மதுரை, திருச்சி, தென்காசி, கோவை, சேலம் ஆகிய இடங்களிலிருந்து, பம்பை செல்லவும், சென்னை யிலிருந்து குமுளிக்கும், முதல் கட்டமாக, எஸ்.இ.டி.சி., சார்பில், இரு மார்க்கத்திலும், தலா, 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, சென்னை, கோயம்பேடு, தாம்பரம், பெருங் களத்தூர், தி.நகர், திருவான்மியூர், பாரிமுனை, பெங்களூரு, திருப்பதி உள்பட, தமிழக முக்கிய நகரங்களிலுள்ள, 52 இடங்களில், முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, குழுவாகச் செல்லும் பயணியருக்கு, பம்பை, குமுளிக்கு சென்று வர, ஒப்பந்த முறையில் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கு, 94450 14463 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.
அதே போல், மதுரை, நெல்லை, கோவை கோட்டங்கள் சார்பில், இரு மார்க்கத்திலும், முதல் கட்டமாக, 50 சிறப்பு பஸ்கள் இயக்கவும், பின் கூட்டத்துக்கேற்ப, அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரைவு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ’சபரிமலை செல்லும் பக்தர்கள், முன்பதிவு மையங்கள், என்ற இணையதளத் தில் https://www.tnstc.in/home.html, முன்பதிவு செய்து, டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். குழுவாக பயணிக்க விரும்புவோர், தங்கள் நகரத்திலுள்ள கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டால், அதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பர். அவர்களுக்கு, அரசு விதிப்படி, கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்’ என்றனர்.