Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., பெரியபெருமாள் கோயிலில் ... தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில் லட்ச தீப வழிபாடு தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில் லட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:11

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்ரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தான இந்த கோவில், சிதிலம் அடைந்து இருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், இடிக்கப்பட்டு திருப்பணிகள் துவங்கின. கோவில் வளாகத்தில் பாலாலயம் அமைத்து, தினமும் பூஜை செய்யப்படுகிறது. கோவில் நிதி மற்றும் உபயதாரர் மூலம் சுப்ரமணிய சுவாமிக்கு கருவரை, கோபுரம், மகா மண்டபம், அம்மன், சிவன், நவகிரங்களுக்கு என, தனித்தனியாக சன்னதிகளும், காம்பவுன்ட் சுவர், தியான மண்டபம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.சோபன மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து, இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி அனுப்பப்பட்டுள்ளது.

பணிகள் முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எப்போது, கும்பாபிஷேகம் நடைபெறும் என, ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அதிகாரிகள் கூறியதாவது:சுப்ரமணிய சுவாமி கோவிலில், சோபன மண்டபம் கட்ட வேண்டியுள்ளது. மணி மண்டபமும், முன் கோபுரமும் சீரமைக்க வேண்டியுள்ளது.இதற்கு தொல்லியல் துறை வல்லுனர்களின் அனுமதியும், இந்து சமய அறநிலைத்துறையின் மாநில தேர் கமிட்டியின் அனுமதியும் பெற வேண்டும். அதன் பின்பு தான், பணிகளை துவக்க முடியும். அனுமதி பெற அனைத்து கோப்புகளும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அனுமதி கிடைத்தவுடன், கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். அனைத்து பணிகளும் முடித்து, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணருக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சியை ... மேலும்
 
temple news
பெருமாள் பக்தனான மன்னர் பத்மாட்சன் காட்டிற்குச் சென்று தவத்தில் ஈடுபட்டார். காட்சியளித்த பெருமாள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா ஆக., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar