பதிவு செய்த நாள்
14
நவ
2019
12:11
திருவள்ளூர்:சென்னை, கோயம்பேடில் இருந்து, திருப்பதிக்கு இயக்கப்படும், ’ஏசி’ பஸ் துவக்க விழா, திருவள்ளூரில் நடந்தது.
அரசு போக்குவரத்து கழகம், திருவள்ளூர் மண்டலத்தில், ஐந்து பனிமனைகளுடன் செயல் படுகிறது. இம்மண்டலத்தில், 252 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், 74 பஸ்கள், 155 புறநகர பஸ்; 23 மாற்று பஸ்கள் அடக்கம். இவற்றில், 59 புதிய பஸ்கள் உள்ளன.இந்த நிலையில், இம்மண்டலத்திற்காக, 3.80 கோடி ரூபாய் மதிப்பில், 11 குளிர்சாதன பேருந்துகள் ஒதுக்கப் பட்டுள்ளன.
இந்த பஸ்கள், சென்னை - திருப்பதி (வழி: பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி - 4; சென்னை - திருப்பதி (வழி: செங்குன்றம், காளஹஸ்தி) - 2 மற்றும், சென்னை - நெல்லுார் - ஐந்து 5 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.இதற்கான துவக்க விழா, திருவள்ளூர் பஸ் நிலையத்தில், நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி தலைமையில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.