வரும், 17ம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கிறது. சபரிமலை பக்தர்கள் வசதிக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குமுளி மற்றும் பம்பைக்கு சிறப்பு பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) முடிவு செய்துள்ளது. குழுவாக செல்லும் பயணிகளுக்கு ஒப்பந்த முறையில் பஸ் இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.விரும்புவோர் 94421 10877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போக்குவரத்து விதிப்படி, கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். www.tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தும் டிக்கெட்டுகளை பெறலாம்.