பதிவு செய்த நாள்
14
நவ
2019
12:11
வீரபாண்டி: மாரியம்மன், முத்துக்குமார சுவாமி கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம் அருகே, காளிப்பட்டி, செங்குந்தர் மாரியம் மன், முத்துக்குமாரசுவாமி கோவில்களில், ஐப்பசி குண்டம் திருவிழா, கடந்த, 8ல் தொடங் கியது.
தினமும் மாரியம்மன், முத்துக்குமார சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (நவம்., 12ல்), மாரியம்மன், சிங்க வாகனத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். நேற்று (நவம்., 13ல்) காலை, அக்னி கரகம், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று (நவம்., 14ல்), பூவோடு எடுத்தல், பொங்கல் வைத்தல், மதியம், பூந்தேர் ஊர்வலம், மாலை கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கும். நாளை, 15ம் தேதி முத்துக்குமார சுவாமிக்கு பொங்கல் வைபவம் நடக்கும். நாளை மறுநாள் 16ம் தேதி, மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன், விழா நிறைவடையும்.