டிசம்பர் 19,2018
சபரிமலை: திருநங்கையர் நான்கு பேர் நேற்று சபரிமலையில் தரிசனம் நடத்தினர்.கடந்த 16-ம் தேதி சபரிமலை தரிசனத்துக்காக வந்த திருநங்கைகள் நான்கு பேருக்கு எருமேலியில் எதிர்ப்பு ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்றதையடுத்து நேற்று காலை 10:15க்கு தரிசனம் செய்தனர். மாளிகைப்புறம் கோயிலில் தரிசனம் செய்தபின் அவர்கள் பம்பை சென்றனர்.இவர்கள் வருவதையொட்டி கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தினர்.