சபரிமலையில் புஷ்பாபிஷேகம்: பக்தர்கள் ஆர்வம்

டிசம்பர் 20,2018



சபரிமலை, சபரிமலையில் ஐயப்பனுக்கும், மாளிகைப்புறத்தம்மனுக்கும் புஷ்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்று புஷ்பாபிஷேகம். இரவு 7:00 மணி முதல் 9:00 வரை ரோஜா, தெற்றி, துளசி, முல்லை, அரளி, செவந்தி, வில்வஇலை என ஏழு வகை பூக்களால் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும். தேவசம்போர்டு அலுவலகத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் இந்த வழிபாட்டை நடத்த முடியும். பூக்களை பக்தர்களே மூலஸ்தானத்திற்கு எடுத்துச்சென்று பூஜாரிகளிடம் கொடுத்து அபிஷேகம் செய்வதை தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்கு பூக்களும், மாலைகளும் பிரசாதமாக வழங்கப்படும்.புஷ்பாபிஷேகம் நடத்தும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது மாளிகைப்புறத்தம்மன் கோயிலும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு தனியாக 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.விபரங்களை 04735 202026, 94464 33811 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம். www.sabarimala.tdb.org.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்