மிக சிறந்த நாள் இன்று.. வேதங்கள் போற்றும் விநாயகரை வழிபட வெற்றி வாகை சூட்டலாம்!

இன்று வாஸ்து நாள், மகா சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும்

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல விரதம் இது

மாலை சந்திரனை தரிசித்து விட்டு அருகம்புல் சாற்றி விநாயகரை வழிபட வேண்டும்

முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.

இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.

இன்று வீட்டில் விநாயகரை வழிபட வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும்!

இன்று துவங்கும் எந்த சுப காரியம் இருந்தாலும் வெற்றியடையும்

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...