விநாயகர் சதுர்த்தியன்று எவ்வாறு வழிபட வேண்டும்?

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார்

சிவ சக்தி தம்பதியரின் மூத்த பிள்ளை இவர்.

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும்.

பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, ஓம் என எழுத வேண்டும்.

மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள்வைக்க வேண்டும்.

வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் விநாயகரை சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும்.

பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு.

இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும்.

சதுர்த்தியில் பாரதம் தந்த பரம்பொருளை வழிபட்டு நீங்க புகழுடன் வாழ்வோம்..!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...