அமர்நாத் யாத்திரை துவங்கியது... ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
இந்த புனித அமர்நாத் பனிலிங்க குகை ஜம்மு காஷ்மீரில் கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்திலுள்ளது.
இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இந்தாண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று துவங்கியது.
புனித குகையை அடைய 2 பாதைகள் உள்ளன. இந்த யாத்திரையில் பங்கேற்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்துள்ளனர்.
பால்டால் மற்றும் பஹல்காமில் இருந்து பக்தர்கள் குழு ஒன்று, ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் புனித குகைக்குப் புறப்பட்டு சென்றனர்.
முதல் அணியில் சுமார் 4,500 பக்தர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டனர். விரைவில் அவர்கள் புனித அமர்நாத் குகைக்கு சென்று தரிசிப்பர்.
இந்தாண்டு 38 நாட்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை, ஆகஸ்ட் 9 சனிக்கிழமை, சவான் பூர்ணிமா நாளில் நிறைவடையும்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாதுகாப்புக்காக 80 ஆயிரம் வீரர்கள் 24 மணி நேரமும் உஷார் நிலையில் உள்ளனர்.
அமர்நாத் யாத்திரைப் பாதையில் ஒவ்வொரு அடிக்கும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.