நவராத்திரியில் எப்படி வழிபட வேண்டும்? 9 நாள் அம்மன் அலங்காரமும்.. வழிபாட்டு முறையும்!

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. 'நவம்' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்றும், 'புதியது' என்றும் இரண்டு பொருள்கள் உண்டு.

வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அம்பாளை கொண்டாடுவோம்

முதல்நாள் அலங்காரம்: மகேஸ்வரி. (மது, கைடபர் என்ற அசுரர்களை வதம் செய்வது போல்)நைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம்,மொச்சை, பருப்பு வடை.வழிபாட்டின் பலன்: செல்வ வளம் பெருகுதல், தீர்க்காயுள்.

இரண்டாம் நாள் அலங்காரம்: ராஜராஜேஸ்வரி (மகிஷாசுரனை வதம் செய்வது போல்)நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரைவழிபாட்டின் பலன்: நோய் தீரும். ஆரோக்கியம் உண்டாகும்.

மூன்றாம் நாள் அலங்காரம்: வராகி (பன்றி முகம் கொண்டவள்)நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி (தட்டாம்பயறு) சுண்டல்வழிபாட்டின் பலன்: குறையில்லாத வாழ்வு அமைதல்.

நான்காம் நாள் அம்பிகை: மகாலட்சுமி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்நைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்வழிபாட்டின் பலன்: கடன் தொல்லை தீருதல்.

ஐந்தாம் நாள் அலங்காரம்: மோகினி வடிவம்நைவேத்யம்: பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்வழிபாட்டின் பலன்: விருப்பம் நிறைவேறும்

ஆறாம் நாள்அலங்காரம்: சண்டிகா தேவி, சர்ப்ப (பாம்பு) ஆசனத்தில் வீற்றிருப்பது போல்.நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகை, பாசிப்பயறு சுண்டல் வழிபாட்டின் பலன்: கவலை தீர்தல், வழக்கில் வெற்றி கிடைத்தல்.

ஏழாம் நாள் அலங்காரம்: சாம்பவி துர்க்கை, பீடத்தில் அமர்ந்திருப்பது போல்.நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டுவழிபாட்டின் பலன்: விரும்பிய வரம் கிடைக்கும்

எட்டாம் நாள் அலங்காரம்: நரசிம்ம தாரிணி, சிங்க முகத்துடன் அலங்கரித்தல்நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை.வழிபாட்டின் பலன்: பிள்ளைகள் நல்ல பழக்கங்களுடன் வளர்தல்.

ஒன்பதாம் நாள்அலங்காரம்: பரமேஸ்வரி, திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்நைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் சேர்த்த பாயாசம், கேசரி, எள் உருண்டைவழிபாட்டின் பலன்: குடும்பமும், நாடும் நல்வாழ்வு பெறுதல்

பத்தாம் நாள் (விஜயதசமி) அலங்காரம்: விஜயா, பார்வதியின் ஸ்துால வடிவம் வழிபாட்டின் பலன்: சகல சவுபாக்கியம்

இந்த நாட்களில், மேற்கண்ட அலங்காரங்கள் செய்ய முடியாத பட்சத்தில், அலங்காரம் செய்ததாக மனதால் வழிபட்டாலும் அம்மன் அருள் கிடைக்கும்!

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...