Load Image
Advertisement

கடகம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

புனர்பூசம்; நெருக்கடி விலகும்

குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
2024ம் வருடத்தில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் எல்லாம் விலகும். விரும்பியது கைக்கு வந்து சேரும். தகுதிக்கேற்ற பொறுப்புகள், பணியில் பதவி உயர்வு ஏற்படும். மற்றவர்களால் முடியாதவற்றை எல்லாம் முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிக்கேற்ப பலன் ஏற்படும். புதிய முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியடைவீர்கள். எதிர்பாராத வருமானம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைக்காக, உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிரிகளால் சங்கடம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் சமாளிப்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், தாரா பலன்களால் 4 பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன் வழங்கிடுவார். தொட்டதெல்லாம் வெற்றி, முயற்சியெல்லாம் லாபம் உண்டாகும். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க வைப்பார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். செல்வாக்கை அதிகரிப்பார். 4ம் பாதத்தினருக்கு அஸ்தமனம் மற்றும் வக்கிர காலங்களில் நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பார். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம் லாபமாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். துணிச்சலுடன் செயல்படும் நிலை உண்டாகும். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு நன்மை தரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் வருமானத்தை உயர்த்துவார். வீட்டில் சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். மே 1 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை உண்டாக்குவார். கடன்களை அதிகரிப்பார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் தொழிலில் மந்த நிலையை உண்டாக்குவார். வருமானத்தில் தடையை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை உண்டாக்குவார். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து பண வரவை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், குடும்பம், உத்தியோகம் என எல்லாவற்றிலும் யோகப்பலனை வழங்குவார். கன்னியருக்கு திருமணம், குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு அந்த பாக்கியம் அருள்வார்.

சூரிய சஞ்சாரம்
புனர்பூசம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மார்ச் 14 - மே 13 வரையிலும், ஆக 17 - செப் 16 வரையிலும், நவ 16 - டிச 15 வரையிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, ஜன 1 - 14 மற்றும், ஏப் 14 - ஜூன் 14 வரையிலும், செப் 17 - அக் 17 வரையிலும் செல்வாக்கை உயர்த்துவார். பிரச்னைகளில் இருந்து உங்களை வெளியில் கொண்டு வருவார். தனித்திறனை வெளிப்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். இழுபறியான வழக்குகளை சாதகமாக முடித்து வைப்பார். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, பொறுப்புகளை அடைய வைப்பார். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடம் மாற்றம், பணி உயர்விற்கு வழியமைப்பார்.

பொதுப்பலன்
நெருக்கடி யாவும் நீங்கும். முயற்சிகள் வெற்றியாகும். கடன்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். பொருளாதாரம் உயரும். அரசு ஊழியர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். செயல் யாவும் வெற்றி பெறும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் இலக்கை அடைவீர்கள்.

தொழில்
மருத்துவம், கல்வி, ஏற்றுமதி, இறக்குமதி, சின்னத்திரை, இயந்திர தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், விவசாயம் ஆகிய தொழில்களைச் செய்வோர் வளர்ச்சியடைவர். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
உழைத்தாலும் உயர்வில்லை என வருத்தப்பட்ட நிலை மாறும். உங்கள் உழைப்பிற்கு மதிப்புண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்பு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள், ஆன்மிகப் பேச்சாளர்கள், கல்வியாளர்களின் நிலை உயரும்.

பெண்கள்
சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவர், குடும்பத்தினரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வேலைத்தேடியவர்களுக்கு தகுதியான வேலை அமையும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஆசை நிறைவேறும்.

கல்வி
படிப்பில் அக்கறை இருந்தாலும் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும். உயர்கல்வி பெறும் கனவு நிறைவேறும்.

உடல்நிலை
கடந்த கால பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். படுக்கையில் இருந்தவர்கள் சிகிச்சையின் காரணமாக எழுந்து நடமாடத் தொடங்குவர். சிலருக்கு மூச்சுத் திணறல், நரம்புப் பிரச்னை ஏற்பட்டு சரியாகும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். சொத்து சேர்க்கையில் ஆர்வம் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்றவற்றில் கவனம் செல்லும். புதிய வாகனம், வீடு என்ற நீண்டநாள் கனவு நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். உறவினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

பரிகாரம்; அனுமனை சனிதோறும் வழிபட்டுவர வாழ்க்கை வளமாகும்.
பூசம்; நினைத்தது நிறைவேறும்

சனி, சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு 2024 வருடத்தில் நினைத்தது நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். எதிர்ப்புகள் விலகும். உடல் பாதிப்புகள் விலகும். தைரியமாக செயல்பட்டு தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பொருளாதார சங்கடம் விலகும்.சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். பணத்தேவை அதிகரிக்கும். சிலருக்கு சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். முயற்சிகளில் இழுபறி உண்டாகும்.

சனி சஞ்சாரம்
அஷ்டமாதிபதியான சனி, அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ.4 – டிச. 31 வரையிலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்புகள் நீங்கும். திட்டமிட்டு செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். பிரச்னைகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டப் பலன்களை அடைவீர்கள்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், தைரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் நிலையில் இதுநாள்வரை இருந்த துன்பங்கள் காணாமல் போகும். தேவையான பணம் வரும். உடல் உபாதை விலகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வேலைத் தேடியவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உத்தியோகத்தில் நெருக்கடிகள் தோன்றும். விரும்பாத இடமாற்றம், வழக்கு என சங்கடங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் தடை, எதிர்பார்ப்புகளில் தோல்வி, பொருளாதார நெருக்கடி தோன்றும். மே 1 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், குடும்பத்தில் சுபநிகழ்வுகள், தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.

சூரிய சஞ்சாரம்
ஜன 1 - 14 வரையிலும், ஏப் 14 - ஜூன் 14 வரையிலும், செப் 17 - அக் 17 வரையிலும் சூரிய பகவான் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நெருக்கடிகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். அரசு பணியாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பார்.எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றத்தை வழங்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து விடுவிப்பார். புதிய தொழில் தொடங்க அரசு அனுமதிக்காக காத்திருந்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.

பொதுப்பலன்
கேது, குரு, சூரியன், செவ்வாயால் வாழ்க்கை வளமாகும். நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேம்படும். அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். துணிச்சலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். புதிய முதலீடு லாபம் தரும். போட்டியாளர்கள் விலகுவர். இயந்திரத் தொழிலில் லாபம் உண்டாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆதாயம் தரும். ஏற்றுமதி இறக்குமதி லாபம் தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். வழக்கறிஞர்களின் நிலை உயரும்.

பணியாளர்கள்
ஏப்.30 வரை பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். புதிய பொறுப்பு வந்து சேரும். சூரிய பகவானின் அருளால் முன்னேற்றம் அடைவீர்கள். மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும் உடன் பணிபுரிபவர்களின் ஆலோசனையை ஏற்பதும் நன்மை தரும்.

பெண்கள்
ஏப்.30 வரை குடும்பத்தில் பிரச்னைகள் வந்து செல்லும். அதன் பிறகு வேலை வாய்ப்பிற்காக செய்த முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களின் கனவு நிறைவேறும். பணிபுரியும் இடங்களில் விழிப்புணர்வுடன் செயல்படுவதும் நன்மையளிக்கும்.

கல்வி
ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் விடாமுயற்சியால் வெள்ளி காண்பீர்கள்.

உடல்நிலை
பரம்பரை நோய்கள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உஷ்ணம், தோல் தொடர்பான நோய்கள், மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படலாம். சிலருக்கு விபத்து உண்டாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

குடும்பம்
பணி, தொழிலில் இருந்த சங்கடம் விலகுவதால் வருமானம் உயரும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டி குடியேறுதல் என உங்கள் கனவு நிறைவேறும். சிலர் விரும்பிய வாகனத்தை வாங்குவர். தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். பொன் பொருள் சேரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரிகாரம்; திருநள்ளாறு சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்து வழிபட நன்மை அதிகரிக்கும்.
ஆயில்யம்; விழிப்புணர்வு அவசியம்

புதன், சந்திரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு 2024 வருடத்தில் பல வகையில் உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் அலசி ஆராய்ந்து அதன் பிறகு ஒரு முடிவிற்கு வருவது நன்மையாகும். உங்கள் சாதுர்யத்தால் நினைத்ததை சாதிக்க முடியும். சங்கடங்கள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டு வரக்கூடிய வல்லமை ஏற்படும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். பண முதலீட்டை விட உங்கள் உழைப்பை நம்பி செயல்படும்போது வெற்றி உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகள், கலைஞர்களின் செல்வாக்கு உயரும்.

சனி சஞ்சாரம்
சனி பகவான் ஆயுள் ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் பிப்.15 வரையிலான காலத்திலும், அதன்பின் அஸ்தமனம், வக்கிர காலங்களிலும் அஷ்டம சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலர் வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்படும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

ராகு - கேது சஞ்சாரம்
2024ல் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், வீரிய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த மாற்றங்கள் வாழ்வில் உண்டாகும். முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். வெளிநாடு செல்லும் முயற்சி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 10ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியில் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வருமானத்தில் நெருக்கடி தோன்றும். மே 1 முதல் 11ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் விசேஷங்கள், தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம், பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.

சூரிய சஞ்சாரம்
ஜன.1 - 14, ஏப்.14 - ஜூன்14 வரையிலும், செப்.17 - அக்.17 வரையிலும் வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். வழக்குகளில் சாதக முடிவு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். அரசு வழியில் உண்டான சிக்கல் விலகும், பணியாளர்களுக்கு உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் முயற்சி வெற்றி பெறும்.

பொதுப்பலன்
கேது சஞ்சாரமும், குரு அருளும் பெருமளவில் பாதுகாக்கும். சூரிய பகவானால் சங்கடங்களில் இருந்தும் விடுபட்டு செல்வாக்குடன் வாழ்வீர்கள். அஷ்டம சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு உயர் பதவிக்குரிய வாய்ப்பு ஏற்படும். திட்டமிட்ட முயற்சிகள் வெற்றியாகும். வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும்.

தொழில்
தொழில், வியாபாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். இயந்திரம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, சினிமா, சின்னத்திரை போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும்.

பணியாளர்கள்
தனியார் துறை பணியாளர்கள் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு சாதுர்யமாக செயல்படுவீர்கள். உங்கள் பிரச்னைகளை முதலாளியிடம் பக்குவமாக சொல்லி தீர்வு காண்பீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். உங்கள் திறமைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

பெண்கள்
தனித்திறமை வெளிப்படும். உயர்கல்விக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என மேற்கல்விக்காக செல்வீர்கள். பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை அடைவீர்கள். சிலர் சுய தொழில் தொடங்குவர். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை அனுசரித்து குடும்பத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

கல்வி
வித்யாகாரகனின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே கல்வியில் ஆர்வம் இருக்கும். இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதால் தேர்வில் வெற்றி உண்டாகும்.

உடல்நிலை
மருத்துவச் செலவு தோன்றும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு, இதய பாதிப்புகள் சிலருக்கு ஏற்படும். பித்தம், மயக்கம், ஜலதோஷம் சங்கடப்படுத்தும் என்றாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் அகலும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாளாக தடைப்பட்ட சுப நிகழ்ச்சி நடந்தேறும். நவீன பொருள், வாகனம் என வாங்கும் நிலை உண்டாகும். சிலருக்கு வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களின் ஆசை பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும்.

பரிகாரம்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளை வழிபட தடைகள் விலகும். செல்வ நிலை உயரும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement