Load Image
Advertisement

கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

அவிட்டம்: தொழிலில் முன்னேற்றம்

செவ்வாயை நட்சத்திராதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும் 1,2ம் பாதத்தினருக்கும் (மகரம்) 3,4 ம் பாதத்தினருக்கும் சனியே ராசி நாதனாக உள்ளார். குரு மே1 முதல் 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாய்ப்பை அள்ளித் தருவார். பொன், பொருள், புகழை வழங்குவார். 3,4 ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரித்து அமைதியின்மை, உடல் சோர்வை ஏற்படுத்துவார்.

பார்வைகளின் பலன்: 1,2 ம் பாதத்தினருக்கு 5ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள், ஜென்ம ராசிக்கும், 9,11 ம் இடங்களுக்கும் உண்டாவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.3,4ம் பாதத்தினருக்கு 8,10,12ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் உடல்பாதிப்பு குறையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும்.

சனி சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு 2ம் இடச் சனியால் தடைகள் குறுக்கிடும். வருமானம் எதிர்பார்த்தது போல இருக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். 3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் உடல் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் நெருக்கடி உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2ம் பாதத்தினருக்கு 3ம் இட ராகுவால் முயற்சி வெற்றியாகும். முடியாமல் நின்ற வேலைகள் நிறைவேறும். 9ம் இட கேதுவால் பெரியோர் ஆசி கிடைக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் வருமானத்தில் நெருக்கடி, குடும்பத்தில் சங்கடம் உருவாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு, வேலைப்பளு உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2 ம் பாதத்தினருக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக்.18 - டிச.15, 2025, மார்ச் 15 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 - 2025 ஜன. 13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இதனால் நெருக்கடி விலகும். முயற்சி வெற்றி பெறும். நோய் தீரும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம், தொழில், உயர்வு அடையும்.

பொதுப்பலன் : 1,2 ம் பாதத்தினருக்கு குருவின் சஞ்சாரத்துடன் அவரது பார்வைகளும், 3ம் இட ராகுவும், 3,4 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகளும், நான்கு பாதத்தினருக்கும் சூரியன் 120 நாட்களும் செவ்வாய் 90 நாட்களும் வாழ்வில் முன்னேற்றம் தருவர். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

தொழில் : தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த செயல்கள் நிறைவேறும்.
பணியாளர்கள் : பணியிடத்தில் நெருக்கடி விலகும். சலுகைகள் கிடைக்கும். அரசு பணியாளர்களின் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும்.
பெண்கள்: குடும்பத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய பொறுப்பு உண்டாகும்.
கல்வி : படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றும். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை : மருத்துவச் செலவு கட்டுப்படும். யோகா, தியானம், நடைபயிற்சி என உடல்நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குடும்பம் : குடும்பத்தில் குழப்பம் தீரும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொன் பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.

பரிகாரம் : கருடன், முருகப்பெருமானை வழிபட நன்மை அதிகரிக்கும்.

சதயம்: குருபார்வையால் நன்மை

ராகுவை நட்சத்திராதிபதியாகவும், சனியை ராசி நாதனாகவும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு குரு பகவான் மே 1 முதல் 4ல் சஞ்சரித்து பலன் தரப் போகிறார். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். வாகனம், நவீன சாதனங்களை வாங்குவீர்கள். பொது வாழ்வில் புகழ் உண்டாகும். எதிர்பார்த்த பொறுப்பு வரும் என்றாலும் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றக் கூடும்.

பார்வைகளின் பலன்: 4ல் சஞ்சரிக்கும் குருவின் 5,7,9 ம் பார்வைகள் ராசிக்கு 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால், நன்மை அதிகரிக்கும். உடல் பாதிப்பு குறையும். தொழில், பணியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாளாக முடியாமல் இருந்த முயற்சி நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு பதவி தேடி வரும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.

சனி சஞ்சாரம் : சனி ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் செயலில் தடை, தாமதம் ஏற்படும். எளிதான வேலை கூட இழுபறியாகும். உறவுக்கும், உங்களுக்கும் இடைவெளி தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் அதிருப்தி ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னை, வருமானத்தில் சிக்கல் ஏற்படும்.
ராகு,கேது சஞ்சாரம்: 2ம் இட ராகுவால் வரவில் தடைகள் தோன்றும். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல்பாதிப்பு உண்டாகும். வாகனப் பயணத்தில் சங்கடம், எதிர்பாராத விபத்தை சந்திக்கலாம். வேலைப்பளு அதிகரிக்கும்.
சூரிய சஞ்சாரம் : சூரியனின் 3,6,10,11 ம் இடங்களுக்கு வரும் மே1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன.13 காலங்களில் முயற்சி வெற்றி பெறும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். நோய்கள் மறையும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். பதவி உயர்வு கிடைக்கும்.

பொதுப்பலன் : 4 ம் இட குருவின் பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் உங்கள் சங்கடங்களை விலக்குவர். பிரச்னை மறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வகையில் நன்மை சேரும். ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தொழில் : 10ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் மூடப்பட்ட தொழில்கள் இக்காலத்தில் திறக்கப்படும். உற்பத்தி அதிகரிக்கும். முயற்சி இனி வெற்றியாகும். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
பணியாளர்கள் : பத்தாமிடம் பலமடைவதால் சங்கடம் தீரும். புதிய பொறுப்பு ஏற்படும். ஊதியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்: குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பிரச்னையை தவிர்க்கலாம். பணியில் புதிய பொறுப்பு உண்டாகும். உடல்நிலையில் ஏதேனும் பிரச்னை உருவெடுத்துக் கொண்டே இருக்கும் என்பதால் உடல்நலனில் கவனம் தேவை.
கல்வி : படிப்பில் அக்கறை தேவை. தேர்வு முடிவில் வெற்றி கிடைத்தாலும் எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும்.
உடல்நிலை: உடல்நிலையில் ஏதேனும் சங்கடம் தோன்றியபடி இருக்கும். அல்சர், ஜீரணக் கோளாறு, கருப்பை பிரச்னை, பரம்பரை நோய், தொற்றுநோய் என சங்கடம் தோன்றும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.
குடும்பம் : குடும்பத்தில் நெருக்கடி தீரும். தம்பதிகளுக்குள் சில நேரம் பிரச்னை ஏற்படலாம். ஆனாலும் பெரியோர்களால் சரி செய்யப்படும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். பொன், பொருள் சேரும். சேமிப்பால் சொத்து சேரும்.

பரிகாரம் : நவக்கிரக வழிபாட்டால் உங்கள் வாழ்வு வளமாகும்.

பூரட்டாதி: எச்சரிக்கை தேவை

குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தினருக்கு (கும்பம்) சனி ராசி நாதனாகவும், 4 ம் பாதத்தினருக்கு (மீனம்) குரு ராசிநாதனாகவும் உள்ளார். இதுவரை 1,2,3 ம் பாதத்தினருக்கு 3ல் சஞ்சரித்த குரு மே1 முதல் 4ல் இருப்பதால் தடைபட்ட பணிகள் முடியும். புகழ் உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றலாம். 4ம் பாதத்தினருக்கு மறைவு ஸ்தானமான 3ல் சஞ்சரிக்கிறார் குரு. சுபகிரகம் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது நன்மை குறையும். எதிலும் எச்சரிக்கை தேவை.

பார்வைகளின் பலன்: 1,2,3ம் பாதத்தினருக்கு 4ல் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 8,10,12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அந்தஸ்து உயரும். உடல் பாதிப்பு நீங்கும். வேலைக்கான முயற்சி வெற்றி பெறும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 4ம் பாதத்தினருக்கு 7,9,11 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். தொழிலில் லாபம் கூடும்.

சனி சஞ்சாரம் : 1,2,3ம் பாதத்தினருக்கு ஜென்ம சனியால் மனதில் இனம் புரியாத குழப்பம், ஆரோக்கியத்தில் சங்கடம் தோன்றும். கூட்டுத்தொழிலில் குதர்க்கம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே இடைவெளி தோன்றும். 4 ம் பாதத்தினருக்கு விரயச் சனியால் எதிர்பாராத செலவு தோன்றும். வாகனம் பழுதாகும். வருவாயில் தடை, தாமதம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதத்தினருக்கு 2ம் இட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். 8ம் இட கேதுவால் உடல் பாதிப்பு உண்டாகும். விபத்து, விரும்பாத இட மாற்றம் ஏற்படலாம். 4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவால் ஆசை அதிகரிக்கும். பணம் பறிபோகும். அவமானம் ஏற்படும். 7 மிட கேதுவால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் குறையும். கூட்டுத்தொழிலில் பிரச்னை உண்டாகும்.
சூரிய சஞ்சாரம் : 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 1 – மே13, ஜூலை 17 – ஆக.16, நவ.16 – 2025 ஜன. 13 காலங்களிலும், 4ம் பாதத்தினருக்கு மே14 – ஜூன் 14, ஆக.17 – செப்.16, டிச.16 – 2025 பிப். 12 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 இட சஞ்சாரத்தால் லாபம் அதிகரிக்கும். துணிச்சல் கூடும். முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். நோய் தீரும்.

பொதுப்பலன் : குரு பார்வைகளாலும், சூரியனால் 120 நாட்களும், செவ்வாயால் 90 நாட்களும் பிரச்னைகள் குறையும். தடைபட்ட செயல் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். அந்தஸ்து, ஆரோக்கியம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும்.

தொழில் : தொழிலில் தடைகள் விலகும். நஷ்டத்தில் இருந்த தொழில்களும் இக்காலத்தில் லாபம் காணும். உற்பத்தி அதிகரிக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பர். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பணியாளர்கள் : பணிபுரியும் இடத்தில் சங்கடம் விலகும். சம்பளம் கூடும். சலுகை கிடைக்கும். ஆனால் வேலைப்பளு கூடும். சகபணியாளர்கள், அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.
பெண்கள்: குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் செயல்படுவர். வாழ்க்கைத் துணைக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். வேலைப்பளு கூடும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் தடைபடும்.
கல்வி : தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். மேற்கல்வி பெற விடாமுயற்சி தேவை. படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
உடல்நிலை: உடம்பில் ஏதேனும் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். அல்சர், அஜீரணம், கர்ப்பப்பை பிரச்சினை, விபத்து என அடிக்கடி மருத்துவ செலவை சந்திக்க நேரும்.
குடும்பம் : தம்பதிக்குள் பிரச்னை தோன்றலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றலாம். இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்: கருமாரியம்மன், ஈஸ்வரரை தினமும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
 
Advertisement