கோவை மாகாளியம்மன் கோவிலில் 101வது பிரம்மோற்சவ விழா



கோவை : என். எஹச் .ரோடு - டவுன்ஹால் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் 101வது பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நிறைவு நாளான நேற்று இரவு 7 மணியளவில்  மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் அருள் தரும் அம்மனாகவும், மாகாளியம்மன் ஆகவும் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்