ராமேஸ்வரம்: ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் 2535வது ஜெயந்தி விழா யொட்டி ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் மகா ருத்ர ஏகாதசி பூஜை நடந்தது.
ஹிந்து மத போதனைகளை நாடு முழுவதும் எடுத்துரைத்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியாரின் 2535ம் ஆண்டு ஜெயந்தி விழாவை இந்தியாவில் உள்ள சங்கராச்சாரியார் மடங்களில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் ஏராளமான புரோகிதர்கள் மகா ருத்ர ஏகாதசி யாகவேள்வி பூஜை நடத்தினர். இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காஞ்சி மடம் மேலாளர் சுந்தரம், நிர்வாகிகள் சாச்சா, சுந்தரம் வாத்தியார் மற்றும் அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் நலசங்கம் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் சுப்பிரமணியன், பலர் பங்கேற்றனர்.