சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் இன்று மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 10 வரை நடைபெறும் விழாவில் 10 நாட்களும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்வான கருட சேவை மே 3ம் தேதியும், தேரோட்டம் மே 7ம் தேதியும் நடைபெறுகின்றன.