திருமலையில் பிரம்மாண்டமாக நடந்த பவுர்ணமி கருட சேவை



திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் கொண்டாடப்பட்டது. இரவு 7:00 மணியளவில், முழுமையான திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுப் பேரொளி வீசிய ஸ்ரீ மலையப்ப சுவாமி, தனது திவ்ய வாகனமான கருடன் மீது அமர்ந்து, ஆலயத்தின் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குத் தனது கருணைப் பார்வையை அருளினார். இதில் ஏராளமாவ பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


புராணங்களின் படி, 108 வைணவ திவ்ய தேசங்கள் (புனிதத் தலங்கள்) அனைத்திலும் கருட சேவை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. கருட வாகன ஊர்வலத்தின் வாயிலாக, தாசானுதாச பிரபத்தி (அதாவது, இறைவனின் அடியாரின் அடியாருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் சரணடைதல்) எனும் உயரிய நெறியைப் பின்பற்றுவோருக்கு, இறைவனே ஒரு சேவகனாகத் திகழ்வார் எனும் தத்துவத்தை இறைவன் உணர்த்துகிறார். மேலும், தெய்வீக ஞானத்தையும் (அறிவு), வைராக்கியத்தையும் (பற்றின்மை) அடைய விரும்புவோருக்கு, அந்த நற்பண்புகளையே தன் இறக்கைகளாகக் கொண்டு விண்ணில் பறக்கும் கருடனைத் தரிசிப்பது, அவர்களின் அனைத்துப் பாவங்களையும் போக்கி அருளும் ஒரு பரிகாரமாக அமையும் எனும் செய்தியையும் அவர் திரளான பக்தர்களுக்கு உணர்த்துகிறார். திருமலையில் நடைபெற்ற இத்தகைய சிறப்பு மிக்க இந்த வாகன சேவையில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர்சி.எச். வெங்கையா சௌத்ரி, துணை செயல் அலுவலர் லோகநாதம் மற்றும் பிற ஆலய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்