விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் சமேத கோலத்தில் பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலிமேலும், அம்ச, கருடன், சேஷ, உபய நாச்சியாருடன், அனுமன், யானை வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும் ஜூன், 2ம் தேதி திருக்கல்யாண வைபவம், அன்றிரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும், 4ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.