காரைக்கால்: காரைக்காலில் பா.ஜக,சார்பில் பல்வேறு கோவிலில், நாட்டை வழி நடத்திவரும் பாரத பிரதமருக்கு எம்.எல்.ஏ.கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ.க.சார்பில் 12 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை வழிநடத்தி வரும் பாரத பிரதமர் நரேந்திரமோடி இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமர்களின் ஒருவராக பணியாற்றிய நரேந்திர மோடிக்கு சிறப்பு விசேஷ பூஜை மற்றும் பிராத்தனை நிகழ்ச்சி இன்று திருவேட்டக்குடி திருமெனியழகர் கோவிலில் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் நமது வரலாற்று நாயகர் பாரதப்பிரதமர் பரிபூரண உடல் ஆரோக்கிய,நீண்ட ஆயுள் மற்றும் இறையருள் கிடைக்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக திருமெனியழகருக்கு சிறப்பு ஆபிரேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்த திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் தலைமையில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த திருப்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரிஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி பெயரில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகதாஸ். தொகுதி தலைவர் மோகன், மாநிலச் செயலாளர் துரைசேனாதிபதி, துணை தலைவர் சோமு,மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலதிபன், பா.ஜக பிரமுகர் விஜயகுமார், சிங்காரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.