முனீஸ்வரம் இருளாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா



கீழக்கரை:  கீழக்கரை அருகே முனீஸ்வரம் கிராமத்தில் பழமை வாய்ந்த இருளாயி அம்மன் கோயில் உள்ளது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. வாஸ்து சாந்தி, கும்பல் அலங்காரம், தீபாராதனை பூர்ணாஹுதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோ பூஜை உள்ளிட்டவைகளுக்கு பின் கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:15 மணிக்கு இருளாயி அம்மன் கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை முனீஸ்வரம் கிராம பொதுமக்கள் மற்றும் முண்டன் வம்சத்தினர், குலதெய்வ குடிமக்கள் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்