கோவை; ஆனி அஸ்தம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் மூலவர் விநாயகருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விநாயக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.