கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளி கோ பூஜை



சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை நடந்தது.


ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு நடந்த சிறப்பு கோ பூஜையொட்டி, காலை 8 மணிக்கு பசு மற்றும் கன்றுக்கு பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை முரளிசர்மா செய்து வைத்தார். இதில் ஆர்ய வைசிய சமூகத்தினர் மற்றும் வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்