SS அன்புடன் அருள் எனக்களிக்கவா! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அன்புடன் அருள் எனக்களிக்கவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!

அன்புடன் அருள் எனக்களிக்கவா..
பாற்கடலில் பள்ளிக் கொண்ட பரந்தாமா!
பரிவுடனே ஆதிசேடன் துணை கொண்டவா!
கருடாழ்வார் தனில்லேரி வலம் புரிபவா!
கருங்கடல் போன்ற கார்மேக நிறம் கொண்டவா-கர்ணன்

கவச குண்டலத்தைப் பரித்து நின்றவா - நீர்!
கர்ணன் ஆவியைப் பிரித்து நின்றவா!
பார்த்தனைப் பாதுகாக்க துடித்து நின்றவா!
பரிதி ஒட்டியே பாரதம் முடித்தவா!
ஈரேழு லோகம் அளந்து நின்றவா!
இரணியன் மார்பை பிளந்து நின்றவா - நர

சிம்ம அவதாரம் எடுத்து நின்றவா!
சிறுவன் பிரகலாதனை காத்து நின்றவா!
இராமாவதாரம் எடுத்து நின்றவா!
இராவண சம்ஹாரம் முடித்து நின்றவா!

அம்மான் கம்சனை அன்று அழித்துவா!
ஆயர்பாடியில் அகம் மகிழ்ந்தவா!
மலை பிடுங்கி நந்தர் குலம் காத்தவா!
மாதவா, யாதவா, வேதவா - கீதா போதகா!

அசோதை வீட்டில் தவழ்ந்து வளர்ந்தவா!
அன்பரைக் காக்க அவதரித்தவா!
அரக்கரை அழிக்கக் கருதரித்தவா!
அன்புடன் அருள் எனக்களிக்கவா!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar