பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திக்கு விஜயம்



பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று திக்கு விஜயம் நடந்தது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நடத்து வருகிறது. நேற்று இரவு சுவாமி அம்பாள் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர். தொடர்ந்து இன்று காலை சிவகாம சுந்தரி, நடராஜர் மூர்த்தி முக்கிய வீதிகளில் திக்கு விஜயம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமியும், விசாலாட்சி அம்பிகையும் தனித்தனியாக குதிரை வாகனத்தில் உலா வருகின்றனர். நாளை காலை விசாலாட்சி அம்பிகை தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்க உள்ளார். மேலும் மாலையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 11:00 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்