காரைக்கால் மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு



காரைக்கால்; காரைக்கால் பழமை வாய்ந்த ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் நேற்று குங்கும காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் நகரில் கடைதெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமகா மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் விழா துவக்கியது. விழாவின் 6ம் நாள் ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு நேற்று முன்தினம் குங்கும காப்பு அலங்காரம் நடைபெற்றது.பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கை அம்மனாக பாவித்து குங்குமம் இட்டு பூஜை செய்யும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்