சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்



கூடலூர்; கூடலூர் கோழிப்பாலம் ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

கூடலூர் கோழிப்பாலம் ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா நேற்று முன்தினம், காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 6:00 மணிக்கு உஷ பூஜை, பரிவார பூஜை, கலசபிஷேகம், மத்திய பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6:00 மணிக்கு தீபாதாரணை, 7:00 மணிக்கு கலசாபிஷேகம், அத்தாழ பூஜை நடந்தது.

நேற்று, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு உஷ பூஜை, 7:00 மணிக்கு ப்ரமஹகலாபிஷேகம் மற்றும் பரிகலசபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாஸ்தாபுரி ஐயப்பன் கோவில் அறக்கட்டளை மற்றும் அப்பகுதியினர் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்