மகாசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை



மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 14ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 23ம் தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பூஜையில் சந்தனகாப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டி ஆகியவற்றை கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

30ம் தேதி அம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. மே 1ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் , பால்குடம் எடுத்து வருதலும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று (29ம் தேதி) ஜடையம்பாளையம் முருகையன் தலைமையில் பஜனை குழுவினரின் வள்ளி கும்மி கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்