திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோபுர,சுவாமிகளுக்கு ஏக தீபாராதனை நடந்தது.
இன்று மாலை மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானார். அதை முன்னிட்டு காலையில் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் 6 கார்த்திகைப் பெண்கள், 4 முனிவர்களுடன் கற்பகவிருட்சத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் யெ்தனர். குருப்பெயர்ச்சியான மாலை 5:21 மணிக்கு தட்சிணாமூர்த்தி கோயில் ராஜகோபுரம்,விமானம், மூலவர். உற்ஸவர் ஆகியோருக்கு ஏக தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாகக் கூடி தீபாராதனையை தரிசித்தனர். மாலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்தது.