நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் தொடர்ந்து குருபகவான் தட்சிணாமூர்த்திக்கு பால்,பழம்,பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது.முன்னதாக மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைப்போலவே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது.