சப்த நதி தீர்த்தங்கள் வைத்து மழை வேண்டி வழிபாடு



பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு நடந்தது.

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததை முன்னிட்டும், மழை பொழிய வேண்டியும், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, காலை 6.00 மணிக்கு திருமஞ்சன நிகழ்ச்சியுடன் நிகழ்வு துவங்கியது. தொடர்ந்து, 7.00 முதல் 12.00 மணி வரை, மழை வேண்டி, ஆழிமழைக்கண்ணா பாசுரம் சேவித்தல் நிகழ்ச்சியும், இதையடுத்து, பால், இளநீர், மஞ்சள், தயிர் ஆகியவற்றால் பெருமாளுக்கு அபிஷேகமும் நடந்தது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய சப்த நதியின் தீர்த்தங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, அமிர்தவர்ஷினி ராகம் இசைக்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்