திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இன்றி பக்தர்கள் அவதி



திருப்புவனம்; திருப்புவனம் திதி பொட்டலில் குடிக்க தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். புண்ணிய நகரான திருப்புவனத்திற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு மஹாளய அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்ளிட்ட தினங்கள் உட்பட அவர்கள் மறைந்த தினங்களில் திதி,தர்ப்பணம் செய்து வணங்கி வழிபட்டால் சந்ததியினரை ஆசிர்வாதம் செய்வதாக இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. மேலும் மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய 30வது நாள் மோட்ச விளக்கும் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலிலும் இந்துக்கள் ஏற்றி வழிபடுகின்றனர். மதுரை, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் இடத்தில் குடிக்க தண்ணீர் வசதி ஏதும் இல்லை. கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கித்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பக்தர்கள் கூறுகையில் திதி பொட்டலில் சிவகங்கை தேவஸ்தானம் சார்பில் திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேரூராட்சி சார்பில் அங்கு தினசரி குப்பைகளை மட்டும் அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். மேலும் குளியல் தொட்டியும் அமைத்துள்ளனர். பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தானம் பக்தர்களுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்வதில்லை. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டுள்ளது. ஆனால் திதி பொட்டலில் இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. கோடை விடுமுறை காலம் என்பதால் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே திதி பொட்டலில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர தேவஸ்தான நிர்வாகம் முன்வர வேண்டும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்