திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விருப்பன்திருநாள் எனப்படும் சித்திரைதேர் உற்சவம் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் மு்க்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் நம்பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பின் ரங்கா.. ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்த கொண்ட தரிசனம் செய்தனர்.