கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமை மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் வெண்ணிற வஸ்திரத்தில் தீப ஒளியுடன் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.