மாமல்லபுரம் : ஆதிவராக பெருமாளுக்கு சித்திரை உத்திரட்டாதி நட்சத்திரம் ஜெயந்தி நாள். இந்நாளான நேற்று, திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு, சித்திரை பிரம்மோற்சவ விடையாற்றியாக, காலை அபிஷேகம், திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. வராக ஜெயந்தியாக, மாலை, சுவாமி வீதியுலா சென்றார். அதேபோல், தொல்லியல் துறை வளாகத்தில் உள்ள ஆதிவராக பெருமாள் கோவில் உற்சவர் ஞானபிரான், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்று, பூதத்தாழ்வாருக்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து பல்லக்கில் வீதியுலா சென்று, கோவிலை அடைந்தார். அவர், தேவியர், ராமானுஜர், அனுமர் ஆகியோருக்கு அபிஷேகம், திருமஞ்சன வழிபாடு, ஊஞ்சல் சேவை, திருவாய்மொழி சாற்றுமறை நடந்தது. மாலை, ஞானபிரான் வீதியுலா சென்றார்.