அடைக்கலம் காத்த அய்யனார், பட்டத்து அரசி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா



கொட்டாம்பட்டி; பள்ளபட்டி அடைக்கலம் காத்த அய்யனார், செல்லாண்டி, பட்டத்து அரசி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா (மே 5) துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் வெள்ளமலை பட்டியில் இருந்து பக்தர்கள் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பள்ளபட்டி மந்தைக்கு புரவிகளை கொண்டு வந்தனர். இன்று (மே 6) மந்தையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மூன்று கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்றனர். இத் திருவிழாவில் பள்ளபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்