புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜூன் 6ல் புறப்படுகிறது



திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி.,தென் மண்டல குழு பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி.,சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6ல் திருநெல்வேலியிலிருந்து ‘புண்ணிய தீரத்த யாத்திரை’ எனும் பெயரில் 500க்கு மேலான பயணிகளுடன் புறப்பட
உள்ளது. இந்த பயணம் திருநெல்வேலியில் துவங்கி விருதுநகர், மதுரை,சென்னை வழித்தடங்களில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டு புண்ணிய ஸ்தலங்களான காசி,அயோத்தி,திருவேணி சங்கமம்,கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை  கொண்ட ரயிலில் 3 நேரமும் சைவ உணவுகள்,பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். பயணிகளுக்கு தென் தமிழக உணவுகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18,850,குழந்தைகளுக்கு ரூ.17,560 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 500க்கு மேலான பயணிகள் பயணிக்கும் வகையில் ரயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தற்போதே தொடங்கிவிட்டது. தென் தமிழக மக்கள் இதுபோன்ற ரயில் பயணங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள். www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். சந்தேகங்கள் ஏற்பட்டால் 82879–32122,82879–32070 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்