திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் இ.ஒ., சரவணபவன் மழை வேண்டி கொடிமரம் முன் மவுன விரதம் இருந்து வருகிறார்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு சமூக அமைப்பு சார்பில் மழை வேண்டி யாகம், வர்ண ஜெபம் ஆகியவை நடத்தப்படுகின்றன. அவ்வகையில், திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் இ.ஒ., சரவணபவன் மழை வேண்டி கொடிமரம் முன் மவுன விரதம் இருந்து வருகிறார்.