ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா



ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயிலில் ஏப்ரல் 26ல் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் சந்தன மாரியம்மன் வீதியுலா எழுந்தருளினார். 12ம் நாள் திருவிழா நேற்று மதியம் 3:45 மணிக்குமேல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. முன்னதாக பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து சந்தன மாரியம்மனை தரிசித்தனர். பின்னர் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா எழுந்தருளினார். பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்